Sunday 16 June 2013

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் - பாடல் வரிகள் (Vaazhndhalum yesum - song lyrics)




வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

படம் : நான் பெற்ற செல்வம்
இசை : ஜி. ராமனாதன்
பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன்
பாடலாசிரியர்: கா.மு.செரிப்

வருடம்: 1956

2 comments:

  1. காலத்தால் அழியாத தத்துவ பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது

    ReplyDelete
  2. அனுபவம் நிறைந்த வார்த்தைகள்

    ReplyDelete