Monday 24 November 2014

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - பாடல் வரிகள் (Vannam konda vennilave - Lyrics)



படம் : சிகரம் 
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இயற்றியவர் : வைரமுத்து 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே!


எனக்கு பிடித்த பாடல் - பாடல் வரிகள் (Yenakku piditha paadal - Lyrics)



படம் : ஜூலி கணபதி 
இசை : இளையராஜா 
இயற்றியவர் : நா. முத்துக்குமார் 
பாடியவர் : ஷ்ரேயா கோஷல் 

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!

உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!


உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிறாய்!
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்!

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே!
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே!

வானத்தில் பறக்கிறேன்!
மோகத்தில் மிதக்கிறேன்!
காதலால் நானுமோர்
காத்தாடி ஆகிறேன்!

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!

வெள்ளி கம்பிகளைப் போல 
ஒரு தூரல் போடுதோ!
விண்ணும் மண்ணில் வந்து சேர 
அது பாலம் போடுதோ!

நீர்த்துளி தீண்டினால் 
நீ தொடும் ஞாபகம்!
நீ தொடும் இடமெல்லாம் 
வீணையின் தேன் ஸ்வரம்!

ஆயிரம் அருவியை 
அன்பிலே நனைக்கிறாய்!
மேகம் போலே - எனக்குள்ளே 
மோகம் வளர்த்து கலைகிறாய்!

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!

உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

Wednesday 12 November 2014

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - பாடல் வரிகள் (Aanandha yaazhai - Lyrics)



படம் : தங்கமீன்கள் 
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி 
இசை : யுவன் சங்கர் ராஜா 
இயற்றியவர் : நா. முத்துக்குமார்  


ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

உன் முகம் பார்த்தால் தோணுதடி 
வானத்து நிலவு சின்னதடி 
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி 
உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி 
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

Tuesday 11 November 2014

அன்பே என் அன்பே - பாடல் வரிகள் (Anbe en anbe - Lyrics)







படம்: தாம் தூம் 
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர்: நா. முத்துக்குமார் மற்றும் பா. விஜய் 


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்!

கண்ணில் சுடும் வெயில் காலம் - உன்
நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம் - இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்!

நீ நீ ஒரு நதியலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ!

மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்திலே கலக்கும்!

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்!

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே!

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு!

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்!

கண்ணில் சுடும் வெயில் காலம் - உன்
நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம் - இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்!

Monday 10 November 2014

ஆடி அடங்கும் வாழ்க்கையடா - பாடல் வரிகள் (Aadi adangum vaalkkayadaa - Lyrics)








படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா


ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை...