Monday 24 November 2014

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - பாடல் வரிகள் (Vannam konda vennilave - Lyrics)



படம் : சிகரம் 
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இயற்றியவர் : வைரமுத்து 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே!